Saturday, November 10, 2012

கிளிநொச்சி


கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கோயில்கள்


இரணைமடு திருவருள்மிகு ஸ்ரீகனகாம்பிகை அம்பாள் 

இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில்
ஆலய  விமானம்  IKAMMAN.jpg
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வடமாகாணம்
மாவட்டம்:கிளிநொச்சி
அமைவு:கிளிநொச்சி,இரணைமடு குளத்தின் இடதுகரையில்
கோயில் தகவல்கள்
மூலவர்:அம்பாள்
சிறப்பு திருவிழாக்கள்:சித்திரை மாதத்தில் வரும் பூரணை தினமான சித்திரா பௌர்ணமி தினத்தை 10வது நாள் தீர்த்த திருவிழாவாக கொண்டமைந்த11நாட்களாகும்
இணையதளம்:http://www.srikanakampikai.com

கனகாம்பிகை அம்பாள்
பெருங்கோவில்இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு நீர்த் தேக்கத்தினை தீர்த்தமாக கொண்டு அதனுடைய இடது கரையிலே அமைந்துள்ள கோயில். இங்கு அன்னை பராசக்தி வலது கரத்திலே கிளியினை ஏந்தியபடி நின்ற திருக்கோலத்தில் "கனகாம்பிகை" எனும் பெயர் தாங்கி மூல தெய்வமாக உள்ளார்.

பொருளடக்கம்

  [மறை

[தொகு]வரலாறு

ஐம்பதுகளின் மத்தியில் கிளிநொச்சியில் பல குடியேற்றங்கள் அமைக்கபட்டன. அக்கால பகுதியில் கிளிநொச்சியில் பல கிராமங்கள் தோன்றின. கிராமங்களில் குடியேறியவர்கள் பல ஆலயங்களையும் அமைத்து வந்தனர். அந்த வகையில் அக்காலபகுதியில் வாழ்ந்த ஈழத்து ஞானியான யோகர் சுவாமிகளதுஅருள்வாக்கினாலும் ஆலோசனையாலும் வழிகாட்டுதலாலும் அக்காலப்பகுதியில் வாழ்ந்த பெரியோர்கள் சிலரது முயற்சியில் அன்னைக்கு இரணைமடுகுளத்தின் இடது கரையில் ஒரு வேப்பமரத்தின் கீழ் சிறு குடிசையால் ஆலயம் அமைக்கப்பட்டது. பின்னர் ஆலய பரிபாலனசபையினரது கடும் முயற்சியால் அடியவர்களின் பங்களிப்புடன் மூன்று குடமுளுக்குகளை கண்டு இன்று பெருங்கோவிலாகி நிற்கிறது.

[தொகு]குடமுழுக்கு

கிளிநொச்சியின் அன்னை எனப்போற்றப்படும் கனகாம்பிகை அம்பாள் ஆலயத்தில் இதுவரையில் மூன்றுகுடமுழுக்குகளைக் கண்டுள்ளது. முதல்குடமுழுக்கானது அறுபதுகளிலும், இரண்டாவது குடமுழுக்கு 1981இலும் இடம்பெற்றன. மூன்றாவது குடமுழுக்கு 1996ஜனவரி 26 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நான்காவது கும்பாபிஷேகமானது 2012 யனவரி மாதம் முப்பதாம் திகதி திங்கட்கிழமை சிவஸ்ரீ ஆதி சவுந்தர ராஜ குருக்கள் தலைமையில் இனிதே நிறைவுபெற்றது

[தொகு]தேர்


முத்தேர்களும் பவனி வரும்காட்சி
வன்னி பகுதியிலேயே சித்திரை தேரோடிய முதல் ஆலயம் என்றும் மூன்று சித்திரதேர்கள் ஓடும் ஒரே ஆலயம் என்றும் மிகப்பெரிய தேர் உள்ள ஆலயம் என்றும் பல பெருமைகள் ஆலயத்திற்கு அங்கு உள்ள சிற்ப வேலைகள் மிக்க சித்திரைதேர்களால் கிடைத்திருக்கின்றன இத் தேர்களானது 1989 ஆம் ஆண்டு மகோற்சவத்தின் பொது வெள்ளோட்டம் விடப்பட்டது

[தொகு]மகோற்சவம்

அம்பாள்ஆலய மகோற்சவமானது ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் பூரணை தினமானசித்திரா பௌர்ணமி தினத்தை 10வது நாள் தீர்த்த திருவிழாவாக கொண்டமைந்த நாட்களாகும். இங்கே நாள் கோடியேற்ற திருவிழா, வேட்டை திருவிழாவும் அன்றிரவு சப்பரமும், தேரும், தீர்த்தமும், பூங்கவனமும் சிறப்பாக நடைபெறும் திருவிழாக்களாகும்.
கொடியேற்ற திருவிழா அன்று பகலும் இரவும் அம்பிகை சுப்பிரமணியர் விநாயகர் சமேதராய் உள்வீதி உள்வீதி வெளி வீதி வலம் வருவர். 2ம் 3ம் 4ம் 5ம் 6ம் 7ம் திருவிழாக்களில் பகலில் அம்பிகை மட்டும் உள்வீதி வலம் வருவார். இரவில் அம்பிகை சுப்பிரமணியர் விநாயகர் சமேதராய் உள்வீதி வெளி வீதி வலம் வருவார்.

[தொகு]வேட்டைத் திருவிழா

8ம் நாள் பகல் உற்சவம் முடிவடைந்ததும் அம்பிகை வேட்டைதிரு விழாவின் முக்கிய நிகழ்வான வாழைவெட்டும் நிகழ்விற்காக திருவையாறு 2ம் பகுதி விநாயகர் ஆலயத்திற்கு எழுந்த்தருளி அங்கு வாழை வெட்டும் உற்சவம் நடைபெறும் அதன் பின் ஆலயம் திரும்பியவுடன் பிரச்சித்த அபிடேகம் நடைபெற்று இரவு பூசையின் பின் அழகிய முத்து சப்பறத்தில் அம்பிகை சுப்பிரமணியர் விநாயகர் சமேதராய் வெளி வீதி வலம் வருவார்.

[தொகு]தேர்த் திருவிழா

தேர் உற்சவமானது 9ம் நாள் காலையில் இடம்பெறும் காலை வசந்த்தமண்டப பூசைகள் முடிந்ததவுடன் அம்பிகை சுப்பிரமணியர் விநாயகர் சமேதராய் தேரில் ஆரோகணிப்பர். முதலில் விநாயகரின் தேரும் அடுத்து சுப்பிரமணியரின் தேரும் அடுத்து அன்னயினுடைய தேரும் வீதிவலம்வரும் தேரிலிருந்த்து பச்சை சாத்தி உற்சவ மூர்த்திகள் இறக்கப்பட்டு நவசக்தி அர்ச்சனை இடம்பெறும் இரவு தேரடி பார்க்கும் உற்சவம் இடம்பெறும்.

தேர் திருவிழா

[தொகு]தீர்த்தம்

10ம் நாள் தீர்த்தம் காலையில் அம்பிகை சுப்பிரமணியர் விநாயகர் சமேதராய் தீர்த்தமாடுவதற்க்காக இரணைமடு குளத்திற்கு எழுந்த்தருளி அங்கு தீர்த்த திருவிழா இடம்பெறும். அன்றிரவு கொடியிறக்கம் இடம்பெறும். பதினோராம் நாள் பூங்காவன திருவிழா அன்று பகல் சங்காபிசேகம் இடம்பெறும். அன்றிரவு அலங்கரிக்கபட்ட பந்ததலில் அம்பிகைக்கு திருவூஞ்சல் இடம்பெற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூந்த்தண்டிகையில் அம்பிகை சுப்பிரமணியர் விநாயகர் சமேதராய் வெளி வீதி வலம் வருவார்.

[தொகு]விசேட உற்சவங்கள்

ஆலயத்திலே மகோற்சவம் தவிர பல விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தைப்பொங்கல்தைப்பூசம்,சிவராத்திரிபங்குனி உத்தரம், சித்திரை வருடப்பிறப்பு, வைகாசி விசாகம்ஆடிச் செவ்வாய்ஆடிப்பூரம்ஆவணி சதுர்த்தி,நவராத்திரிவிஜய தசமி (மானம்பூ), கேதாரகௌரி விரதம்கந்தசஷ்டிதிருவெம்பாவை போன்றவை சிறப்பாக நடைபெறும்.

இரணைமடு திருவருள்மிகு ஸ்ரீகனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்
அதேவேளை நவராத்திரியின் 9ம்நாளன்று மகிஷாசூரன்போர் இடம்பெறும். இந்நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் இவ் ஆலயத்தில் மட்டுமே இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சமயகுரவர் நால்வரின் குருபூசை தினங்கள் ஆலயகும்பாபிசேக திதியில் சங்காபிசேகம் ஆடிச் செவ்வாய் கடைசி செவ்வாயில் யாகம் போன்றனவும் சிறப்பாக இடம்பெறும்.

[தொகு]அமைப்பு

இவ்வலயமானது ஆகம முறைப்படி அமைக்கபட்டுள்ளது. கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இவ்வாலயத்தில் கருவறையில் மூலவர் வீற்றுருக்கிறார். கருவறையைத் தொடர்ந்து அர்த்தமண்டபம், மகாமண்டபம், சபாமண்டபம், ஸ்தம்பமண்டபம் ஆகியவை காணப்படுகின்றன.
உள்பிரகாரத்தில் கருவறைக்கு வலதுபக்க மூலையில் கிழக்கு நோக்கியவாறு விநாயகர் சந்நிதியும், இடதுபக்க மூலையில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதியும் அமைந்துள்ளது. தெற்கு வாயிலுக்கு அருகில் சமயகுரவர் சந்நிதியும், கருவறை கோமுகைக்கு அருகில் தெற்கு நோக்கி சண்டேசுவரி சந்நிதியும், தம்பமண்டபத்திற்கு கிட்டவாக நவக்கிரக சந்நிதியும் உள்பிரகாரத்தின் வடக்கு பகுதியில் தெற்கு நோக்கி நடராஜர் சந்நிதியும் அதனையடுத்து வசந்தமண்டபமும் அமைந்துள்ளது. இதேவேளை ஆலய பிரதான வாயிலுக்கு வலப்புறம் (வெளியிலிருந்து வரும் போது) மணிக்கோபுரமும் அதனை அடுத்து வைரவர் நாகதம்பிரன் சந்நிதியும், அதனை அடுத்து யாகசாலையும் அமைந்துள்ளது.
இதனைவிட உள் பிரகாரத்தில் அலுவலகம், மடைபள்ளி, களஞ்சிய அறை, வாகனசாலை போன்றனவும் அமைந்துள்ளன. வடக்கு பகுதியில் உள்பிரகாரத்திற்கும் வெளிபிரகாரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அழகிய நந்தவனமும் அமைந்துள்ளது. இதேவேளை கூரைபோடப்பட்ட உள் வீதியும் விசாலமான வெளிவீதியும் அமைந்துள்ளது.

[தொகு]பாலத்தாபனம்


போரின் போது சேதமடைந்த ஆலயத்தின் பகுதி ஒன்று
ஈழத்தில் இடம்பெற்ற போரின் போது சிறிய அளவில் சேதமடைந்த இவ்வாலயத்தினை மீளப் புனரமைத்து மகாகும்பாபிஷேகம் செய்வதற்கு ஏதுவாக 2010சனவரி 29 ஆம் நாள் ஆலயம் பாலத்தாபனம் செய்யப்பட்டது.

[தொகு]





உருத்திரபுரம் சிவன் கோயில்

உருத்திரபுரீஸ்வரம் ஆலயம் அல்லது பொதுவாக உருத்திரபுரம் சிவன் கோயில் என்பது இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உருத்திரபுரம் என்ற ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில். கூழாவடிச் சந்தியிலிருந்து மேற்கே செல்லும் வீதி சிவன் கோவில் வீதியாகும். தற்போது அவ்வீதி நீவில் என்ற கிராமத்தினூடாகவே செல்கின்றது. ஆரம்பத்தில் அப்பாதையின் இருமருங்கும் அடர்ந்த காடாகவும் வண்டில் மாட்டுப் பாதையொன்றும்தான் இருந்தது. ஐம்பது அடி உயரத்திற்கும் மேற்பட்ட வீரமரம், பாலைமரம் மற்றும் பலவகை மரங்கள் சூழ்ந்த காட்டினூடாகவே அப்பாதையில் பயணிக்கவேண்டும். மந்திக் குரங்குகள் அப்பாதையில் காணப்படும்.
1950களில் அப்பிரதேசத்தில் செங்கற்களாலான இடிபாடு ஒன்று வேலாயுதசாமியால் கண்டறியப்பட்டது. பின்பு ஊர்ப்பெரியவர்களும் இணைந்து தோண்டிப்பார்த்து அவ்விடம் புராதன சிவன் கோவிலின் சிதைவுகள்தான் என்று உறுதி செய்யப்பட்டது. முதலில் வேலாயுதசாமியார் அப்பகுதியில் சிறு குடிசையொன்றில் உருவாக்கி மூலஸ்தானத்தில் வேல் மட்டுமேயிருந்த முருகன் ஆலயம் மட்டுமே அவரால் பராமரிக்கப்பட்டு வந்தது.யாழ்ப்பாணத்திலிருந்தும் பக்கதர்கள் வந்து சென்றனர். இங்குள்ள சிவலிங்கம் ஆவுடையார் பொறிறழக்கடவை ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்டதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். கோவிலுக்கருகிலுள்ள தாமரைப்பூக்கள் சூழ்ந்த குளம் கோவிலுக்கான சுற்றாடலை இயற்கையாகவே அமைந்துள்ளது.
இங்கு அம்பாளோடு விநாயகர் சனீஸ்வரன், வைரவர் ஆகிய மும்மூர்த்திகள் உளர், தினமும் மூன்றுகாலப்பூசை சிறப்பு நாட்களில் நடைபெறுகின்றது.


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிளிநொச்சி கந்தசுவாமிகோவில்
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயமானது இலங்கையின் வடமாகாணத்திலே உள்ள கிளிநொச்சிமாவட்டத்தில் கிளிநொச்சி நகரில் யாழ்ப்பாணம் கண்டியை இணைக்கும் 1-9 (A-9) நெடுஞ்சாலையில் அமைந்த்துள்ளது மேற்கு திசை நோக்கியுள்ள இவ்வாலயத்தில் மூலஸ்த்தானத்தில் வேல் பிரதிஷ்டை பண்ணப்பட்டிருக்கிறது பரிவார தெய்வங்களாக விநாயகர் நடராஜர் தட்சணாமூர்த்தி சமயகுரவர் பைரவர் நவக்கிரகமூர்த்திகள் போன்ற தெய்வங்கள் வீற்று இருக்கின்றனர்
இவ்வாலய மகோற்சவம் ஆண்டு தோறும் ஆவணி மாதம் இடம்பெறும் அதேவேளை கந்த சஷ்டிஇவ்வாலயத்தில் மிகச்சிறப்பாக இடம்பெறும். இப்பிரதேச மக்களில் பலர் இவ்வாலயத்திலேயே விரதத்தினை அனுட்டிப்பர். கந்த சஷ்டிவிரதத்தின் இறுதிநாளன்று இடம்பெறும் சூரன் போர் விழாவும் சிறப்பாக இடம்பெறுவதுடன் மறுநாள் பாரணை தினத்தன்று இரவு திருக்கலியாண உற்சவமும் சிறப்பாக இடம்பெறும்.

சங்கர நாராயண சிவலிங்கேஸ்வரர் ஆலயம்

சங்கர நாராயண சிவலிங்கேஸ்வரர் ஆலயம் கிளிநொச்சி முரசுமோட்டை பிரதேசசபைப் பிரிவில் பரந்தன் முல்லைத்தீவு (A30) வீதியில் அமைந்துள்ளது. பல்நெடுங்காலமாக புற்றில் தோன்றிய இறைவனை பின்னர் சூலம் ஒன்று அமைத்து ஆலயம் அமைத்துப் பூசித்து வந்தனர். இது 1998 இல் இடம்பெற்ற உள்ளூர்ப் பிரச்சினைகளால் சேதமடைந்ததுடன் மக்களும் அப்பிரதேசத்தை விட்டு இடம் பெயர்ந்தனர். மீண்டும் 13 ஜூலை 2005 இல் அடிக்கல் நாட்டி புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப் பட்டன. இந்த ஆலயத்தில் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மடம் ஆத்மகாந்தஜீ சுவாமிகள் பூசை செய்த விக்கிரகம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.


கங்கேஸ்வரர் தேவஸ்தானம்
படிமம்:Arulmiku Ambigadevi Sametha Kangkeswarar Devasthanam.jpg
அருள்மிகு கௌரி அம்பிகாதேவி சமேத கங்கேஸ்வரர் தேவஸ்தானம் யாழ் கண்டி நெடுஞ்சாலையில்155ஆம் கட்டைப் பகுதியில் வீதிக்குக் கிழக்காக வீதியுடன் அமைந்துள்ளது. 1980 ஆம் ஆண்டு வரை ஓர் இலிங்கத்தை மரத்தின் கீழ் வைத்து ஊரவர்கள் வழிபட்டு வந்தனர். பின்னர் அரசாங்கம் விவசாய ஆராய்ச்சி அலுவலர்களுக்குப் பகிர்ந்தளித்தபோது இலிங்கத்திற்கு ஓர் பந்தல் போடப்பட்டது. 1984 ஆம் ஆண்டளவில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்வதற்காக கோயில் அமைப்பு விதிகளுக்கு அமையக் கட்டப்பட்டது. 1989 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலஸ்தானத்தில் சிவலிங்கமும் வாயிலின் இருபக்கமும்பிள்ளையாரும் முருகனும் ஸ்தாபிக்கப்பட்டனர். அச்சமயத்தில் வைரவர் சூலவடிவில் வைக்கப்பட்டு இருந்தார். கோயிலுக்கான கிணறும் இக்காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. தற்போது தினமும் இருநேரப் பூசை நடைபெறுகிறது.



வட்டக்கச்சி கந்தசுவாமி ஆலயம்


வட்டக்கச்சி ஆறுமுகம்வீதி அருள்மிகு கந்தசுவாமி ஆலயம்
வட்டக்கச்சி ஆறுமுகம்வீதி அருள்மிகு கந்தசுவாமி ஆலயம் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிபிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி கிராமத்தில் ஆறுமுகம் வீதியில் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தின் மூலஸ்தானத்தில் முருகனின் வேல் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. பரிவார தெய்வங்களாக விநாயகர்நவக்கிரக மூர்த்திகள் மற்றும் வைரவர் போன்ற தெய்வங்கள் விளங்குகின்றன. உற்சவ மூர்த்திகளாக வள்ளி, தேவயானை சமேத சுப்பிரமணியரும், வள்ளிதேவயானை சமேத ஆறுமுகப்பெருமானும் இருக்கின்றபோதிலும் ஆலய தேர் திருவிழா மற்றும் சூரன் போர் ஆகிய உற்சவங்களுக்கே ஆறுமுகப்பெருமான் எழுந்தருளுவது குறிப்பிடத்தக்கது.

[தொகு]மகோற்சவம்

ஆலய மகோற்சவமானது ஆனி மதத்தில் வரும் பௌர்ணமி நாளை பத்தாவது நாள் தீர்த்த திருவிழாவாக கொண்ட பதினொரு நாட்களாகும். முதல்நாள் கொடியேற்றம், ஏழாம் நாள் வேட்டைத் திருவிழா, எட்டாம்நாள் சப்பறம், ஒன்பதாம் நாள் தேர் உற்சவம், பத்தாம் நாள் தீர்த்தம், பதினோராம் நாள் பூங்காவனம் (திருக்கலியாணம்) ஆகியன இங்கே சிறப்பாக இடம்பெறும் திருவிழாக்களாகும்.
அதேவேளை கந்த சஷ்டி இவ்வாலயத்தில் மிகச்சிறப்பாக இடம்பெறும். இப்பிரதேச மக்களில் பலர் இவ்வாலயத்திலேயே விரதத்தினை அனுட்டிப்பர். அதேவேளை கந்தசஷ்டியின் இறுதிநாளன்று இடம்பெறும் சூரன் போர் விழாவும் சிறப்பாக இடம்பெறுவதுடன் மறுநாள் பாரணை தினத்தன்று இரவு திருக்கலியாண உற்சவமும் சிறப்பாக இடம்பெறும்.


மாவடி மாரி அம்பாள் தேவஸ்தானம்


மாவடி ஸ்ரீமாரி அம்பாள் தேவஸ்தானம்
மாவடி ஸ்ரீமாரி அம்பாள் தேவஸ்தானம் இலங்கையில் கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தின் மூலவராக ஸ்ரீமாரிஅம்பாள் விளங்குகிறார். விநாயகர், சுப்பிரமணியர், சந்தானகோபாலர், பைரவர், நவக்கிரக மூர்த்திகள், சண்டேஸ்வரி போன்ற தெய்வங்கள் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ள இவ்வாலயம் ஆகம முறையில் அமைந்த ஆலயமாகும். ஆலய உள்பிரகாரத்தில் பரிவார தெய்வங்களுக்கான சந்நிதிகள் அமைந்துள்ள அதே வேளை சனீஸ்வரருக்கு தனிச்சன்னதியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

[தொகு]மகோற்சவம்

இவ்வாலய மகோற்சவம் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளைப் பத்தாவது நாள் தீர்த்த திருவிழாவாக கொண்ட பத்து நாட்களாகும். கொடியேற்றம், சப்பரம், தேர் மற்றும் தீர்த்த திருவிழாக்கள் இங்கு சிறப்பாக இடம்பெறும் திருவிழாக்களாகும். ஆலய வேட்டை திருவிழா அன்று வட்டக்கச்சி (சில்வா வீதி)ஐயனார் ஆலயத்திற்கு அம்பிகை எழுந்தருளி அங்கு வாழை வெட்டும் உற்சவம் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை ஆனி உத்தரத்தன்று ஆலயத்தில் பொங்கல் உற்சவமும் சிறப்பாக இடம்பெறும். அன்றையதினம் வட்டக்கச்சி ஆறுமுகம் வீதி முருகன் ஆலயம் இராமநாதபுரம் வயலூர் முருகன் ஆலயம், புதுக்காடு ஐயனார் கோவில், போன்ற பல்வேறு ஆலயங்களிலிருந்து காவடிகள் (தூக்குக்காவடி,பால்க்காவடி, பன்னீர்க்காவடி,புஷ்பக்காவடி) எடுத்து வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர்.

    No comments:

    Post a Comment